Posts

காற்றாக நானும்

Image
  காற்றாக நானும் காற்றாக நான் இருந்தேனா!   தேகம் நுழையா இடம் காண வதனம் அடையா மேடு ஏற  கால் சுவடு இல்லா வனம் நாட!   காற்றாக நான் இருந்தேனா அலைகடல் மேல் தவழ்ந்திட மலை முகடுகளைக் கடந்திடப் பனிச் சிகரத்தில் உறைந்திட !   காற்றாக நான் இருந்தேனா ஆகாயத்தில் பரவி நிறைந்திட அம்புலியோடு விளையாடிடத் தாரகைகளுடன் கதைத்திட!   காற்றாக நான் இருந்தேனா மரங்களை ஆட்டுவித்து மகிழ வயல் வழியூடாக தவழ்ந்திட மூங்கில் துளை இசையாகிட!   காற்றாக நான் இருந்தேனா மெல்லியால் இடை சுற்றிடக் காதலன் தூதனாய் சென்றிடத் தென்றலாய் மகிழ்ந்து குலாவிட!   காற்றாக நான் இருந்தேனா புயலாய் மாறி புவி புரட்டிட மழையை வாரி வருசித்திட ஊழிக் காற்றாய் உலகழித்திட !   காற்றாய் நான் இருந்தேனா கடந்த பாதை அறிந்திடோம் கடக்கும் காலம் கடந்த பின்னே காற்றாய் நான் இருப்பேனா?

தண்ணீர்

Image
  தண்ணீர்  வெண்மேகம் உலா வந்தது கடலில் தாகம் தனித்தது தாராளமாய் நிறைந்துவிட கார்முகிலாய் மாறியது!   காற்றுடன் கலகம் செய்தது இடிமுழக்கமாய் வசை பாடி மின்னல் வெட்டும் விழி காட்டி வானம் விட்டு வெளியேறியது!   மழை என பெயர் மாற்றியது மலை மேல் தரை இறங்கியது நிலமகள் அழைப்பு அனுப்ப அருவியாய் தாவிக் குதித்தது!   நதியாய் ஓடி விளையாடியது வேண்டி அழைத்தவர் விருப்பம் கிணறு குளம் ஏரி ஓடை உற்று என அவதாரம் கொண்டது !   எஞ்சிய சிறு மேனி கொண்டு தலைவனுடன் சங்கமித்தது தன் அடையாளம் தொலைத்து மீண்டும் தலைவன் பெயரால் கடல் என பெயர்க் கொண்டது

அந்தாதி நாள்!

Image
அந்தாதி நாள்! அடுத்த வருடம் பிறப்பு நாளை  அந்தம் அடைந்த இந்த வருடம் , ஆதிமுதல் தொடங்கும் நாளை  அடுத்த வருடம் எனும் பெயரில்.   ஆங்கில வருடம் எண்ணிக்கை  ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் . தன்னுள் தரணி நிகழ்வைத்  தேதி வாரியாக நிறைத்தும், அகிலம் முழுதும் அறிய எளிது  இந்த ஆங்கில வருட எண்ணிக்கை எதிலும் வேண்டும் கணக்கு  எண்ணி எண்ணிக் கழியும் பொழுது , துளி துளியிலும் நிமிடம் நாழிகை  நாள் வாரம் மாதம் ஆண்டு என  இதிலும் வந்தது கணக்கு ! மனிதன் வாழ்க்கை சுழல்  சுற்றும் இந்த கணக்கில் சென்ற வருடம்  விட்டுச் செல்லும்  சில நினைவுகளைக்  கடத்திச் செல்லும்  சில மனிதர்களைப்  பிரித்துச் செல்லும்  சில உறவுகளைப்  பதித்துச் செல்லும்  சில பதிவுகளைப்  பறித்துச் செல்லும்  சில பற்றுகளைக் கொண்டு சேர்க்கும்  சில கருத்துகளை  சில எதிர்பார்ப்பை சில நம்பிக்கைகளை  வாழும் சக்தியை  வாழ்வு பிடிப்பை  வாழ்க்கை பாதையைத்  தெளிவு சிந்தையை அந்தம் ஆனது ஓர் ஆண்டு 1 ஆதி முதல் தொடர்ந்தது ... மனிதன் கணக்கில் மீண்டும...

எல்லாம் புதியவை

Image
   எல்லாம் புதியவை!  அன்று மலரும்  அத்துணையும்  புதிது  காலை  புலரும் பொழுது  சூரியன் உதிக்கும் விடியல்  பறவைகள் கலவை ஒலி  மொட்டிலிருந்து விரியும் மலர் மிதமாய் விழுந்த பனித்துளி  நாசி நுகரும் காபி மணம்  பொங்கி வழிந்த சாதம்  கொதித்து அடங்கும் குழம்பு  உண்டு மகிழ்ந்த ருசி  பாதம் சுட்ட சூடு  தலையைத்  தகித்த வெயில்  வீதி வலம் வரும் பசுவின் குரல்  அந்தியில் மலர்ந்த மல்லிகை  புவியிலிருந்து புறப்பட்ட நீர்  தழுவிச் சென்ற தென்றல்  முதல் முறைக் கேட்ட பாடல்  கண்ணில் விரிந்த காட்சிகள்  உருத்து விழித்த  கோபப்பார்வை   சட்டெனத்  தணிந்த கனிவு  மொட்டென மலர்ந்த பாசம்  அதில்  தேனின்  இனிய நேசம்  உமிழ் நீர் சுரந்த தாகம்  அமிழ்தாய் அதை அணைத்த தண்ணீர்  இதுவரைக் காணா  நின்  முகம்  இதுவரை க்  கேளா உன் சொல்  அதிர்ச்சி தந்த க ன ங்கள்    மகிழ்ச்சி தரும் மணிகள்   உடல் தரும் உபாதைகள்  மருந்தாய்...

கோபாலா நீ வாராய்!

Image
   கோபாலா நீ வாராய்! பிருந்தாவனமும் நந்தகுமாரனும் இல்லை  ஆதரவு தந்து மகிழ்ந்த  ஆயர்குலமும் இல்லை  ஆறு குளம் எரியும் பசும் புல்லும் இல்லை  பால் தரும் பசுக்கள் பதறுகின்றன  கோபாலா நீ வாராய்! காய்ந்த புல்லும்  வைக்கோலும் கிட்டுமோ  தன்  வயிறு நிரப்பி மடி நிறைத்துப்  பிறந்த கன்றுக்குப் பால் புகட்ட -எனும்  ஏக்கத்தில் பசுக்கள் மறிகின்றன  கோபாலா நீ வாராய்! வெண்மைப் புரட்சியென விதவிதமாய்  வெள்ளைத் திரவங்கள் செயற்கைப் பைகளில்  அடைத்து வர அரிதாகிப் போகுமோ  வெள்ளை,கறுப்பு பழுப்புப்  பசுக்கள்  கோபாலா நீ வாராய்! காய்ந்த புல்லுக்கும் கடும் பஞ்சம்  காகிதமும் செயற்கை இலைகளும்  ஆகாரமாய் காளைகள் உண்டால்  குடல் கிழியுமோ மலடாகுமோ  கோபாலா நீ வாராய்! பால் சுரக்கும் மடி வறண்டால் வேண்டாத  சுமையென மலையாளக் கரை ஒதுக்கிக்  காவு தந்துவிடுகிறான் பாவி மகன்  நீ ஆதரித்த இனம் அழிந்துவிடாமல்  கோபாலா நீ வாராய்! குடிமக்கள் குறை தீர்க்க வேண்டாம்  "கோ" இனம் காத்திட வா கோபாலா  உன் வருகைக்க...

அம்மா தாயி!

Image
  அம்மா தாயி! வண்ணம் கொண்டு வளைய வரும் வாழ்வில் நிறமற்ற அல்லது மங்கிய நிறம் கொண்ட சில பாத்திரங்கள் மனதில் பதியும், அதில் ஒன்றே அம்மா தாயி! இது தினமும் என் வீடு தேடிவந்த வினோதமான உறவு. அழுக்கு புடவை, கலைந்த முடி, சோகமுகம்,சோம்பல் தேகம்! ஆறடி தூரம் வரும் போதே குடலை புரட்டும் வாடை கையில் தூக்கு போணி இது தான் அம்மதாயீ! தாயாக மாறும் முன்னே என்னைத் தாயாக அழைத்தது, பதின் பருவ சமையலையும் பாராட்டியது. மிஞ்சிய சோறும் குழம்பும் அமிர்தம் அதற்கு! தினமும் வீடு தேடி வரும் விருந்தினர் ஆனது சில நாள் பழக்கத்தில் வாடிக்கையானது, மிச்சம் வரும் வெஞ்சனம் சுடவைத்துப் பக்குவமாய் பல நாள் அதன் வரவை காத்து நான் நின்றதுண்டு! அம்மா தாயி என்று அதன் குரல் கேட்டு உன் மகள் வந்தது என்று-என் கணவர் எனை கேலி செய்யும் உறவானது. காலங்கள் கடந்து மனக்கண்ணில் நிற்கும் ஏழு வருட உறவு அம்மா தாயி!

பிச்சி மகள்

Image
  பிச்சி மகள்   அவளைப் பார்த்தது பல வருடங்கள் முன்பு பதிந்தது அந்த உருவம் பசைபோல் மனதில் வீதியில் வலம் வரும் அநாதை -அபலை அவள் மானம் காத்துக் கொள்ளவும் மதியில்லா மங்கை ! கிழிந்த ஆடையில் மகிழ்ந்து திரியும் நங்கை சுற்றித் திரியும் விழிகளில் - திக்கற்ற பார்வை பசிக்கு உணவுப் பாதையிலிருந்தாலும் போதும் படுத்து உறங்கக் கோவில் மரத்தின் மேடை! வினைப் பயனாய் வீணே சிரித்து விருந்தானாள் பேதை ஒருநாளில் ஓராயிரம் முறை பூனை நடை பயில்வாள் அந்நகர் வீதிகளை நடையாய் நடந்து அளந்து சலிப்பாள் அப்பகுதி மக்களுக்கு அவளும் ஓர் அசையும் அடையாளம் ! தினமும் திரிவதால் மிச்சம் சொச்சம் போட்டு காட்சிப் பொருளாய் கண்டு கதை பேசும் பொருளாய் ஒரு சீவன் உண்டு என்ற வரையில் பரிட்சயம் மாதங்கள் உருண்டோட அவளிடம் ஒரு மாற்றம் ! பிறை நிலவாய் வளர்ந்தது அவள் வயிறு -மேடிட்டு அப்பகுதி அம்மணிகளின் மனம் அதிர்ச்சியுற்றது! பிச்சியையும் விட்டுவைக்கா பேதைமை உலகம் தன் காம இச்சைக்குக் கெட்டழியும் கயவர் உலகம் ! தன் மதி அறியாதவளைத் தாயாக்கிய பாதகர் நிறை அயோக்கிய ஆடவர் உலகம் அடுக்குமோ இது ! அப்பனே அவனவனுக்குத் தக்க தண்...