தண்ணீர்

 

தண்ணீர் 

வெண்மேகம் உலா வந்தது

கடலில் தாகம் தனித்தது

தாராளமாய் நிறைந்துவிட

கார்முகிலாய் மாறியது!

 

காற்றுடன் கலகம் செய்தது

இடிமுழக்கமாய் வசை பாடி

மின்னல் வெட்டும் விழி காட்டி

வானம் விட்டு வெளியேறியது!

 

மழை என பெயர் மாற்றியது

மலை மேல் தரை இறங்கியது

நிலமகள் அழைப்பு அனுப்ப

அருவியாய் தாவிக் குதித்தது!

 

நதியாய் ஓடி விளையாடியது

வேண்டி அழைத்தவர் விருப்பம்

கிணறு குளம் ஏரி ஓடை உற்று

என அவதாரம் கொண்டது !

 

எஞ்சிய சிறு மேனி கொண்டு

தலைவனுடன் சங்கமித்தது

தன் அடையாளம் தொலைத்து

மீண்டும் தலைவன் பெயரால்

கடல் என பெயர்க் கொண்டது


Comments

Popular posts from this blog

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

DS நாவல்கள்

மனச தாடி என் மணிக்குயிலே