Posts

Showing posts with the label சிறுகதை

எங்க ஊரு, எங்க சாமி ! நீ உள்ள வராதே!

Image
  எங்க ஊரு, எங்க சாமி ! நீ உள்ள வராதே!  வயல்களுக்கு நடுவில் ஆலமரமும், மருதமரமும் பசுமை கோபுரங்களாக விண் நோக்கி இருக்க, அதன் கீழே, திறந்த வெளியில் அமைந்திருந்த கருப்பண்ணச்சாமி கோவில். ஆளுயரத்தில் படு கம்பீரமாக, முறுக்கு மீசைக்காரனாக, கோனைக் கொண்டையிட்டு, வலது கையில் வீச்சரிவாலும், இடது கையில் கதாயுதம் தாங்கி, தன் பரிவார தெய்வங்களோடு , அந்த பசும் பூமியில் தன் விழியோட்டி, அனைத்துக்கும் காவலனாய் நின்றார், மூன்று மாதங்களுக்கு முன் குட முழுக்கு கண்ட மாவடி முத்துக்கருப்பணசாமி.   ஏகாந்தமாய் மருதமரத்தடி நிழலில்,அவன் வீற்றிருக்க,  மரங்கள் இரண்டும்,  இலைகளாலும், பூ,கனிகளாலும் அர்ச்சித்து, அவ்விடத்தையே நிறைத்திருந்தன. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்த, கோவில் வளாகத்தை,  கோவிலின் பூசாரியும், சாமியாடியுமான முத்துசாமியின் பேத்தி, முத்து பேச்சி, கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள். வயல் நடுவிலிருக்கும் கோவிலுக்கு, உள்ளூர்காரர்களே , " துடியான தெய்வம்" எனப் பயபக்தியோடு  கூட்டமாகத் தான் வந்து செல்வார்கள். பிறந்தது முதல், தாத்தா, அம்மாச்சியோடு வளர்ந்த முத்த...

ங ப்போல் வளை

Image
  ங ப்போல் வளை.  புது வருடம் பிறந்து விட்டது. எப்போதும் பனியில் நனைந்தபடி பிறக்கும் வருடம், இந்த வருடம், அடாத மழையின் தொடர்ச்சியாக வந்த மூன்று நாள் மழையில் குளித்தபடி பிறந்தது. " ஆத்தாடியாத்தி, எந்த வருசமும் இப்படி மழையைப் பார்த்ததில்லையடி ஆத்தா. கார்த்திகை கழிஞ்சாலே, கடும் மழை இல்லையிம்பாக, இப்ப என்னடான்னா, மார்கழி பிறந்தும்ல மழை கொட்டுது" என இயற்கையை வியந்தபடி பூவாத்தா வாசலை எட்டிப் பார்க்க, அவரது மூத்த பேரன் மனைவிகள் இருவரும், மெனக்கெட்டு ஒரு மணி நேரமாகப் புள்ளி வைத்துப் போட்டிருந்த பூக்கள் நிறைந்த வண்ணக் கோலம், கரைந்து தூரிகையால் ஆங்காங்கே துடைத்து விட்ட மாடர்ன் ஆர்ட் போல் வண்ணக் கலவைகள் தங்களுக்குள் கை கலந்து உரு மாறி நின்றன. கையில் காப்பிக் கோப்பையோடு, உருமாறிய கோலத்தையே , வராண்டா வழியே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பூவாத்தாவின் கடைசிப் பேரன் மனைவி வைசாலி. " இது என்னடி அதிசயமா, அசலூர்காரி இங்கனை உட்கார்ந்திருக்கா" என அடுத்த அதிசயமாய்ப் பார்த்தார் பூவாத்தா. அவர் குரல் கேட்டும் கண்கள், கரைந்த கோலத்தின் வண்ணத்தில் உரைந்திருக்க, மனதில் பல்வேறு எண்ணங்களை ஓட்டி...